ஸ்டிக்கர் ஒட்டிய ருஸ்தி என் விடுவிக்க்கப்பட்டார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்டிக்கர் ஒட்டிய ருஸ்தி என் விடுவிக்க்கப்பட்டார்?


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கலந்துரையாடலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, தற்போதைய அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், அது மீண்டும் ஒரு இளைஞரை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரை அரசாங்கம் உடனடியாக விடுவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா சுட்டிக்காட்டினார்.


"கொம்பனித் தெருவில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் ஒரு இளைஞர் ஒரு ஸ்டிக்கர் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையொப்பமிட்ட உத்தரவின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். 


ஆனால் என்ன நடந்தது? பல்வேறு நபர்களிடமிருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. GSP+ மதிப்பீட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வருவதால், தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டார்," என்று அவர் கூறினார். 


இலங்கை பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டது போல, இந்த விஷயத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமிருந்து மறைக்க முடியாது என்று எதிர்க்கட்சி எம்.பி மேலும் கூறினார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.