முஸ்லீம் இளைஞனின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது; மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லீம் இளைஞனின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது; மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை!


இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.


ஊடக அறிக்கைகளின் படி இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டின் கீழ்  இளைஞர் ஒருவர் சமீபத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


பயங்கரவாதத்துடன்  தொடர்பில்லாத நடவடிக்கைகள் உட்பட பல நடவடிக்கைகளிற்கு எதிராக அரசாங்கம் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பல தடவை பயன்படுத்தியுள்ளது.


மேலும் கருத்தை வெளியிட்டமைக்காக தனிநபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்துகின்றது, இது சுதந்திரமான கருத்து வெளிப்பாடு மற்றும் மாற்றுக்கருத்திற்கு பரந்துபட்ட தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.


ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கத்தை சேர்ந்தவர்களும், பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதாகவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்திருந்த பின்னணிலேயே இது இடம்பெறுகின்றது.


கடந்த காலங்களில் ஜனாதிபதியும்,அரசாங்கத்தில் உள்ளவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தினால்  ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக்கொண்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.


அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளமையும் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றமையும் கவலையளிக்கின்ற விடயம்.


மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையமும் ஏனைய அமைப்புகளும் பல வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன.


ஆரம்பத்தில் தற்காலிகமான ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், பின்னர் நிரந்தரமானதாக விஸ்தரிக்கப்பட்டதுடன், இலங்கையில் பல தலைமுறையாக மக்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சட்டம் குறிப்பாக இன மத சிறுபான்மையினத்தவர்கள், செயற்பாட்டாளர்கள், மாற்றுக்கருத்து உடையவர்கள், பத்திரிகையாளர்களை இலக்கு வைத்துள்ளதுடன் சித்திரவதையை இயல்பான விடயமாக்கியுள்ளது. இதனுடன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரமும் ஆழமாக வேரூன்றியுள்ளது.


இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் கடந்;த காலத்துடன் நிறுத்தப்படவேண்டும், பயங்கரவாத தடைசட்டத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடி தடையை விதிக்கவேண்டும், அதனை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.