பல முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடத்தை ஹராம் என தெரிவித்த அமைச்சர் பிமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடத்தை ஹராம் என தெரிவித்த அமைச்சர் பிமல்!


மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் மீது முஸ்லிம் அரசியல்வாதிகள் பொய்யாக குற்றம் சாட்டுவதாகக் கூறி, அவரை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்னாயகே முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க, அமைச்சர் பால்ராஜ் இஸ்லாம் அல்லது அதன் சட்டங்கள் தொடர்பான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்றும், அதில் இன அல்லது மத தாக்கங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.


முஸ்லிம் தலைவர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு எந்தவொரு இஸ்லாமிய சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னர் குறிப்பிட்டதாகவும், சமீபத்திய நிகழ்வில் அமைச்சர் பால்ராஜ் தெரிவித்த செய்தி இது என்றும் அவர் மேலும் கூறினார்.


"ஹராம் தொழில்களில் ஈடுபட்டு, ஹராம் வாழ்க்கை வாழும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சினைகளைக் கிளப்புவதற்காக, அமைச்சர் பால்ராஜ் மீது எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள்," என்று அவர் கூறினார்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மதங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையையே விரும்புகிறது என்பதை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர் ரத்நாயக்க, அமைச்சர் பால்ராஜ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம் அரசியல்வாதிகளை எச்சரித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.