சரியாக படிக்காத மகன்களை கொலை! தந்தை தூக்கிட்டு தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சரியாக படிக்காத மகன்களை கொலை! தந்தை தூக்கிட்டு தற்கொலை!


ஆந்திர பிரதேசம் காக்கிநாடா மாவட்த்தை சேர்ந்தவர் சந்திர கிஷோர், அவரது மனைவி ராணி, இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரின் கல்வித் திறன் குறைவாக இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த கிஷோர் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால் இந்த போட்டிகள் நிறைந்த உலகில் எப்படி போராடுவார்கள் என பயந்தார்.

இந்த எண்ணம் அவரை ஆத்திரம் அடைய செய்தது. இதனால் கிஷோர் தனது இரண்டு மகன்களையும் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார், பின்னர் கிஷோரும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திகு சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.