முன்னாள் போலீஸ் மா அதிபரின் வீடு சோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் போலீஸ் மா அதிபரின் வீடு சோதனை!


முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வசிக்கும் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.


அவரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


போலீசார் அங்கு சோதனையிட்ட போது அவர் அந்த வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.


2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலேயே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவரை கைது செய்வதற்காக பொலிஸார் வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவாகி இருந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஆனால் இன்று அல்லது நாளை அவர் சரணடைவார் என நம்புகின்றேன் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.