படலந்த அறிக்கை: 35 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படலந்த அறிக்கை: 35 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!!


படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 


சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டினார். 


ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவையினால் இந்த பட்டலந்தை அறிக்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்குக் கொள்கைத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 


தலைமுறையின் மனசாட்சியை கட்டுப்படுத்தும் இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் மக்கள் மயப்படுத்துவதற்கும் எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


போராட்டங்களை நடத்திய தலைமுறையின் கண்ணீர் அவர்கள் அனுபவித்த வேதனைகள் மற்றும் சோதனைகள் அவற்றுக்கு அர்த்தம் தெரிவிப்பதற்கு 208 பக்கங்களுடன் காணப்படும் இந்த அறிக்கைக்கு முடியாது என்பதை நாம் அறிவோம். 


இந்த அறிக்கை கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களின் பாசமிக்கவர்களுடைய வேதனைகள் மற்றும் பெருமூச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கையாக அதனைத் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். 


ஜனாதிபதி செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை 35 வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகச் சபை முதல்வர் குறிப்பிட்டார். 


தமது அரசியல் நோக்கங்களுக்காக நாடொன்று பல யுகங்களாக முற்றிலும் அழித்துச் செல்லப்பட்டுள்ளது. 


எவ்வாறு எனில், ஜனநாயகத்திற்குக் கிடைத்த மக்கள் வரத்தை தமது நண்பர்களுக்காகப் பலிகடாவாக்க முடியுமா என்பது தொடர்பாக இந்த அறிக்கை ஒரு வாழும் சாட்சியாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.