முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
'இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களை நாங்கள் கண்டறிய முடியும்' என்றும் அமைச்சர் தெரிவித்தார்.