சட்டவிரோத வாகனம்; முன்னாள் எம்.பி மற்றும் மகன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோத வாகனம்; முன்னாள் எம்.பி மற்றும் மகன் கைது!


சிலாபம் பகுதியில் சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஜீப்பை ஒரு நபர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை தொடங்கப்பட்டது.

அதன்படி, இன்று (18) மாலை, இந்த ஜீப்பின் உரிமையாளர் என்று தோன்றிய நபரும், அதைப் பயன்படுத்தி வந்த அவரது மகனும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்து, சட்டவிரோதமாக பாகங்களை ஒன்று சேர்த்து போலி எண் தகடுகளுடன் வாகனத்தைப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 63 வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது 31 வயது மகன், இருவரும் சிலாபத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள்.

சந்தேக நபர்கள் நாளை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.