நன்கொடை வசூலித்து மோசடி; சமூக ஊடக ஆர்வலர் உட்பட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நன்கொடை வசூலித்து மோசடி; சமூக ஊடக ஆர்வலர் உட்பட இருவர் கைது!


'லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற போலி கணக்கின் மூலம் ஆன்லைனில் ரூ 2.9 மில்லியன் மோசடி செய்ததற்காக சமூக ஊடக ஆர்வலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


போலி கணக்கின் மூலம் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் விளைவாக நேற்று இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


கல்பிட்டியில் உள்ள பள்ளிவாசல்துறை பகுதியில் சேனதீரகே துலான் மகேஷித என்ற 28 வயது சமூக ஊடக ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.


23 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் நுரைச்சோலை கரம்ப பகுதியில் கைது செய்யப்பட்டார்.


சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.