ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்!


இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.


இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.


இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின்  விகாராதிபதியாவார். அகில இலங்கை சாசனபாதுகாப்பு  சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் அவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.


இந்த நிகழ்வில் தெனிகே ஆனந்த தேரர், கரகஸ்வெவ ஆனந்த தேரர்,  விதாரந்தெனியே நந்த தேரர் உள்ளிட்ட பிக்குமார் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர். 


நியமனக் கடிதத்தை வழங்கிய பின்னர்,  மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினருடன் ஜனாதிபதியின் செயலாளர் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.