ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலாப் பெண் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலாப் பெண் பலி!


பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19) பயணித்த  பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் பலியானார்.


பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நடைமேடையில் தொங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது, பாறையில் மோதி ரயிலில் இருந்து விழுந்தார். 


படுகாயமடைந்த அவர், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.


ரஷ்ய சுற்றுலாப் பயணியான 53 வயதான பெர்மினோவா ஓல்கா என்ற பெண்ணே இவ்வாறு இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இலங்கைக்கு சுற்றுலா பயணம் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் வந்த அந்தப் பெண், இன்று காலை பதுளை ரயில் நிலையத்திற்கு வந்து, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயிலில் ஏறி எல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.