போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!


போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.


ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 


மேலும், அவரது உரைகளை படிப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (14) அவர் இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கெமிளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் நகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக மூட்டு மற்றும் இடுப்பு வலி, பெருங்குடல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸுக்கு, ஹெர்னியா அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.