மது போதையில் பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மது போதையில் பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்!


முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள  அரச பாடசாலை ஒன்றிற்குள் மது போதையில் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.


மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 43 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள  அரச பாடசாலை ஒன்றிற்குள் நேற்று மது போதையில் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார்.


இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.