வேகமாக பரவும் தீ; உதவி கோரும் வனத்துறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேகமாக பரவும் தீ; உதவி கோரும் வனத்துறை!


சிவனொளிபாத மலைத் தொடர் வனப் பகுதியில் நேற்று (23) ஏற்பட்ட  தீ, வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


நல்லதண்ணிய, வால மலை தோட்ட பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவும் மிக வறண்ட காலநிலையுடன் மலை உச்சிகளில் வேகமாக பரவியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வனப்பகுதிக்கு விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என  நல்லதண்ணிய பொலிஸார் சந்தேகிக்கின்றதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.