ரோஹிங்கியாக்கள் என்போர் யாவர்?' நாளை கொழும்பில் கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரோஹிங்கியாக்கள் என்போர் யாவர்?' நாளை கொழும்பில் கலந்துரையாடல்!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கைக்கு சமீபத்தில் வந்த மியான்மரைச் சேர்ந்த நாடற்ற அகதிகளான ரோஹிங்கியாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கிற நாடற்ற ரோஹிங்கியாக்கள் சம்பந்தமான வீடியோ சாட்சியங்களைக் கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நாளை (27) திங்கட்கிழமை பிற்பகல் 3.00-5.00 மணி வரை கொழும்பு 10, இல 281, டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூகம் சமய நடுநிலையத்தில் (CSR),  இடம்பெறவுள்ளது.

ரோஹிங்கியாக்கள் : அவர்கள் யார்? அவர்கள் ஏன் இலங்கையில் இருக்கிறார்கள? நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் இக் கலந்துரையாடலானது சமூகம் சமய நடுநிலையம் (CSR) மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் எவரும் கலந்து கொள்ளலாம் எனவும் உங்களின் வருகையை கீழ்வரும் (எஸ்.எம்.எஸ். அல்லது வட்ஸ்அப் செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தும் படியும் கேட்கப்பட்டுள்ளனர். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.