30 ஆயிரம் அரச சேவை வெற்றிடங்களை நிரப்பத் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 ஆயிரம் அரச சேவை வெற்றிடங்களை நிரப்பத் திட்டம்!


அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுச் சேவைக்குள் ஒருங்கிணைந்த மனித வள முகாமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தொழில்நுட்ப நடைமுறைகளால் ஆட்சேர்ப்பில் தாமதம் ஏற்படுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


அரச உத்தியோகத்தர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பை வழங்குதல் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை 3 வருடங்களுக்குள் நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


அரச சேவையை பிரஜைகளின் உரிமையாகவும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகவும் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.


தற்போதைய அரச சேவை தொடர்பில் குடிமக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


ஜூன் மாதத்திற்குள் பொதுச் சேவைக்கான துல்லியமான தரவு அமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொதுச் சேவைக்குள் தற்போதுள்ள தரவுகளில் குறிப்பிடத்தக்க சிக்கலான தன்மை இருப்பதாகவும், இது துல்லியமான முடிவுகளை எடுக்கும் திறனைத் தடுக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.