வெடிகுண்டு மிரட்டல் - இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெடிகுண்டு மிரட்டல் - இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானம்!


வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் மும்பையிலிருந்து 96 பயணிகளும் 8 பணியாளர்களும் கொண்ட "விஸ்தாரா" விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனை செய்யப்பட்டது.


அதற்காக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் இராணுவ கமாண்டோ படை அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கைகள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.