வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு!


எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்யும் முறை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) விளக்கமளித்தார்.


இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவைப் பேச்சாளர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.


எந்தவொரு வகையிலும் கட்டணச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.


மேலும் 'வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னதாக எடுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த முறை அவசரமாக நாம் வாகனங்களை கொண்டு வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டணச் சலுகை தரும் வாகனங்களை கொண்டு வரவில்லை.  ஆனால் வாகனங்களை இறக்குமதியை ஒரு சரியான முறைக்கு உட்பட்டு நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், எமது டொலர் தொகை வெளியேறாத வகையில், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்த வாய்ப்பை வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.


தற்போது, ​​எமது அரசாங்கத்தின் புதிய தீர்மானமாக கட்டணச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதை செயற்படுத்தவில்லை. ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்' என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.