கம்பளையில் மூன்று வயது சிறுவன் இறந்த சோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளையில் மூன்று வயது சிறுவன் இறந்த சோகம்!


கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதுடைய மகன் செலுத்திய நவீன ரக ஜீப், கம்பளை பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவைக்கு அருகில் வைத்து முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில், அதில் இருந்த மூன்று வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


வெளிநாட்டில் இருந்து கம்பளை இல்லவத்துறைக்கு வந்திருந்த மொஹமட் சிராஸ் அம்மே என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .


விபத்தை ஏற்படுத்திய ஜீப் தொடர்ந்து சுமார் 55 மீற்றர் தூரம் முன்னோக்கி சென்று கம்பளை தனியார் பஸ் நிலையத்திற்கு திரும்பும் போது அங்கிருந்த பழ வியாபாரி ஒருவர் மீதும் மோதியுள்ளதுடன் அருகில் இருந்த மற்றொரு முச்சக்கர வண்டியுடனும் மோதி நின்றுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.