உபுல் தரங்கவை கைது செய்ய தடை விதித்து உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உபுல் தரங்கவை கைது செய்ய தடை விதித்து உத்தரவு!


மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி தெரிவுக்குழுவின் தலைவர் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது.


மாத்தளை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து உபுல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எம்.டி.எம்.லஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


மேட்ச் பிக்சிங் வழக்கின் சாட்சியாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி, உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.


தரங்க அமெரிக்காவில் இருக்கும் போதே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் உபுல் தரங்க சார்பில் கமிந்து கருணாசேனவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன, ஷெனாலி டயஸ் மற்றும் விக்கும் ஜயசிங்க ஆகியோர் முன்னிலையாகினர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.