முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி?


தமது சிறப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பும் முகமாக, முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் முன்னணியொன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என, முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.


அண்மையில் நடத்திய அறிவார்ந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிகள் பலர் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இது தொடர்பான விடயங்களை முன்வைத்துள்ளனர்.


வாழ்வதற்குரிய சிரமங்கள் தொடர்பான பெரும்பாலான விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகள் அதிகம் என்ற சமூகப் பேச்சு காரணமாகவே அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.