கடைசி தருணம் தமிதாவின் பெயர் இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடைசி தருணம் தமிதாவின் பெயர் இல்லை!


இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில், இரத்தினபுரி மாவட்டத்தில் தான் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள திருமதி தமிதா அபேரத்ன, ஆனால் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுத் தேர்தல் வேட்புமனுவில் தனது பெயர் சேர்க்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


குறித்த வேட்புமனுவில், முதலில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கும்புர ஆராச்சிகே ஹேஷான் விஜய விதானகேவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வேட்புமனுவை இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி வசந்த குணரத்னவிடம் கையளித்த பின்னர் இதன் பிரதியொன்று ஏனைய வேட்புமனுப் பட்டியல்களைப் போன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.