பாடசாலைகளுக்கான அதிரடி அறிவிப்பு - பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளுக்கான அதிரடி அறிவிப்பு - பிரதமர்

பொதுமக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதை நிறுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் கசிந்தமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்த விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கையை மேற்கொண்டு தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாடசாலைக் கல்வியின் அபிவிருத்தியே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுவதாகவும் கல்விக்காக அதிக நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.