மஹிந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் இணையாது என அந்த முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்ற அரசியல் பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


"விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுவதால், அடிமட்ட அளவில் திட்டங்களை வகுத்து, கட்சி மீண்டும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் வகையில் செயல்படும்" என்றார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.