பரீட்சை திணைக்களம் அருகே பரபரப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சை திணைக்களம் அருகே பரபரப்பு!


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்துக்கு முன்பாக பெற்றோர் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்சிலர், பரீட்சை திணைக்களத்துக்கு சென்று கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர்.


பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தியதால், பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.