WOMEN’S ASIA CUP: இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WOMEN’S ASIA CUP: இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

2024 மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பாகிஸ்தான் அணி பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக உதேஷிகா பிரபோதனி மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி, 19வது ஓவரில் பதில் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

எதிர்வரும் ஞாயிறு இலங்கை அணி இந்திய அணியினை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது. 









*2024.07.26* | 𝐒𝐢𝐧𝐢𝐧
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.