Prestige Falcon இல் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Prestige Falcon இல் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு!


ஓமான் கடற்பிராந்தியத்தில் 'Prestige Falcon' எனும் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 9 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் எஞ்சிய 8 பேரும் இந்திய பிரஜைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டெக் யுத்த கப்பல் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


காணாமல் போனோரை மீட்பதற்காக இந்திய கடற்படையின் P 81 ரக விமானமும் பயன்படுத்தப்பட்டிருந்தது. 


ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயிருந்தனர். 


கொமொரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், யேமன் துறைமுகமான ஏடனிலிருந்து ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில் வைத்து கவிழ்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. 


ஓமான் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு காணாமல் போன 3 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.