கிளப் வசந்த கொலை வழக்கில் இரகசிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றக் காவலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிளப் வசந்த கொலை வழக்கில் இரகசிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றக் காவலில்!

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் கைதான உரிமையாளர் கடுவெல நீதவானிடம் 40 நிமிட இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் துலான் சஞ்சய சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரருக்கு இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக வாக்குமூலம் அளிக்குமாறு துலான் சஞ்சயாவுக்கு பொலிஸார் அழுத்தம் கொடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, துலான் சஞ்சய மற்றும் ஏனைய எட்டு சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.