
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் துலான் சஞ்சய சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரருக்கு இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக வாக்குமூலம் அளிக்குமாறு துலான் சஞ்சயாவுக்கு பொலிஸார் அழுத்தம் கொடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, துலான் சஞ்சய மற்றும் ஏனைய எட்டு சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.