ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்தார் - மஹிந்த அமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்தார் - மஹிந்த அமரவீர

ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று (22) மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.