சிறையிலிருந்து வெளியேறிய ஞானசார தேரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறையிலிருந்து வெளியேறிய ஞானசார தேரர்!


நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டிருந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ர் பிணையில் விடுதலைசெய்யப்பட்ட நிலையில், இன்று (22) சிறையிலிருந் வெளியேறியுள்ளார்.


18 ஆம் திகதி பிணையில் விடுவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கல­கொட அத்தே ஞான­சார தேர­ரை விடுதலை செய்ய  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவினால் இன்று காலை  விடுதை செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், 50,000 ரூபாய் காசு பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன், வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாமிய மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.