ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 


இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.


துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.


இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 


முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதேயான தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


அவர் சுமார் 05 முறை துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதுடன், இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று FBI தெரிவித்துள்ளது.


துப்பாக்கி சூடு நடத்திய தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். 


இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ-பைடன் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் வௌியிட்டுள்ளதோடு, தனது அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளதாக வௌிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.