யுவதியை நிர்வாணமாக வீடியோ எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யுவதியை நிர்வாணமாக வீடியோ எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சிக்கினார்!


வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நேற்று (16) முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.


வவுனியா திருவனாவ் குளம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்கி இருந்த விடுதி ஒன்றில் குறித்த விரிவுரையாளர் ஆங்கில வகுப்பு ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ​​அரச ஊழியரான பாதிக்கப்பட்ட யுவதி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.


அப்போது விரிவுரையாளர் வகுப்பை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று குளியலறையின் ஜன்னல் வழியாக யுவதி குளிப்பதை தன் கையடக்கத் தொலைபேசியூடாக வீடியோ எடுத்துள்ளார்.


குளித்துக்கொண்டிருந்த யுவதி, குளியலறையின் ஜன்னலிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று தெரிவதை கண்டு பயந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.


பின்னர் ஆங்கில விரிவுரையாளர் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும், இதுகுறித்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ​​விரிவுரையாளர் குளியலறை அருகே நின்று வீடியோ பதிவு செய்வதை அதில் காணொளியாக பதிவாகியுள்ளது.


மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த யுவதிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.