கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!


வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வனப்பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 


மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன் மதவாசி வனப்பகுதியில் திருகோணமலை - அனுராதபுர பிரதான வீதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க கூடிய வனப்பகுதியில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், செல்வநாயகம் புரம் பகுதியை சேர்ந்த ஜெயரூபன் (வயது - 42) எனவும்  அவரின் கேப் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர், இவர், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜெயரூபன் என்பவரை வீட்டிலிருந்து நபரொருவர் வெள்ளிக்கிழமை (12) அதிகாலை 2 மணியளவில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் அவர் தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர், காணாமல் போனதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஜெயரூபனின் குடும்பத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 


பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் 48, 51 மற்றும் 24 வயதுடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.


அதனடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடத்தை மொறவெவ மற்றும் உப்புவெளி பொலிஸார் இணைந்து கண்டறிந்த குறித்த காட்டுப்பகுதியில் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட சடலத்தை மீட்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.