3 வயது மகனை சித்திரவதை செய்த 24 வயது தந்தை கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3 வயது மகனை சித்திரவதை செய்த 24 வயது தந்தை கைது!


தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய்த தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் இருந்து நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர் தனது தாயாருக்கு பணம் அனுப்புவதாலும், கணவனும் பணம் அனுப்பாததாலும் சிறுவனை சித்திரவதை செய்து அதன் காணொளியை மனைவிக்கு அனுப்பியுள்ளார்.


இந்த காணொளியை குறித்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது மூன்று வயது சிறுவனை காப்பாற்றுமாறு பதிவிட்டுள்ளார்.


அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.