18 பொருட்களுக்கு விலை வரம்பு நிர்ணயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 பொருட்களுக்கு விலை வரம்பு நிர்ணயம்!


இந்த வாரத்திற்கான 18 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பொதுமக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார தெரிவித்தார்.


அதன்படி, கோதுமை மா, வெள்ளை சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், காய்ந்த மிளகாய், காய்ந்த மிளகாய், முட்டை, டின் மீன், பச்சை அரிசி, நாட்டு அரிசி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான விலை வரம்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.


இந்த விலை வரம்பு நுகர்வோர் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அறிவிக்கப்படுவதாகவும் சந்தையில் நிலவும் போட்டியின் மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என நம்புவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.