ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழப்பு தொடர்பான சவூதி நாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழப்பு தொடர்பான சவூதி நாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தில் இருந்து வந்த சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் அதிக தூரம் வெப்பத்தில் நடந்து செல்ல வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.


பல நேரங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.


இறந்தவர்களில் சுமார் 75% பேர் ஹஜ் பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதிகளை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடுமையான வெப்பம் காரணமாக நோய்வாய்ப்பட்ட சுமார் 500,000 பேருக்கு சுகாதாரத் துறையினர் சிகிச்சை அளித்துள்ளதுடன், அவர்களில் சுமார் 140,000 பேர் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.