பாடசாலையில் வழங்கப்பட்ட போஷாக்கு உணவு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலையில் வழங்கப்பட்ட போஷாக்கு உணவு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்!


கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே 25 மாணவர்கள் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆரம்ப பாடசாலையின் 3C மற்றும் 3D வகுப்புகளில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


3D வகுப்புக்கு உணவு வழங்கும் பெண் இன்று இல்லாததால் 3C வகுப்புக்கு உணவு வழங்கும் பெண்ணே 3D வகுப்புக்கும் உணவு வழங்கியுள்ளதாகவும் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.