சிறுமி தாக்கப்படும் வீடியோவை வெளியிட்ட இளைஞனுக்கு பணம் வழங்கி கௌரவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுமி தாக்கப்படும் வீடியோவை வெளியிட்ட இளைஞனுக்கு பணம் வழங்கி கௌரவிப்பு!


முல்லைத்தீவு - மணலாறு (வெலிஓயா) பகுதியில் 4 சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்ட தருஷ சந்தருவான் கொடிகார என்ற இளைஞன் கௌரவிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.


அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறித்த வீடியோவால் குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


இந்நிலையில், சந்தேகநபரான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, அந்த இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.