நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு!


நாளை (24) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 


தமது உறுப்பினர்கள் நாளை மற்றும் நாளை மறுதினமும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகியவற்றிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை அமுல்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 25ஆம் திகதி மேல் மாகாணத்திலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.


தமது சேவைக்கான சேவை யாப்பை தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.


ஆனால் பாடசாலை நடவடிக்கைகள் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதேவேளை, அனைத்து ஆசிரியர்- அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.