கரையான் அரித்து அழிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் 25 கோடி பெறுமதியான டொலர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கரையான் அரித்து அழிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் 25 கோடி பெறுமதியான டொலர்கள்!


முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான ஐக்கிய அமெரிக்க டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை இவ்வாறு கரையான்களால் அரிக்கப்பட்டுள்ளன என லங்காதீப இணையத்தளம் செய்தி ​வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வேட்பாளர் ஒருவர் இரகசியமாகப் பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த டொலர்களே இவ்வாறு அரிக்கப்பட்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.


இந்த முன்னாள் வேட்பாளரின் கோரிக்கையின் பேரில் ஒரு பிரதானியின் தலையீட்டின் மூலம் கரையான் உண்ட டொலர் நோட்டுகளுக்கு பதிலாக புதிய டொலர் நோட்டுகள் இந்த முன்னாள் வேட்பாளருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


முன்னாள் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக அந்த பிரதானி உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து முன்னாள் வேட்பாளர் இந்த டொலர்களை பெற்றதாக கூறப்படுகிறது.


அதன்படி, டொலர்களை எடுப்பதற்காக, டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ள பணப் பெட்டகத்தை சோதனையிட்ட போது கரையான்கள் அவற்றை அழித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.


அதன்பின், அந்த டொலர்களை புதிய நோட்டுகளாக மாற்ற, பிரதானியிடம் வேட்பாளர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரின் டொலர் சம்பவமே அண்மைய நாட்களாக அரசியல் களத்தில் பல இடங்களில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.