17 வயது மாணவி கூட்டு வன்புணர்வு; ஐவர் தடுத்து வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 வயது மாணவி கூட்டு வன்புணர்வு; ஐவர் தடுத்து வைப்பு!


ஹன்வெல்ல, எம்புலகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில், 5 இளைஞர்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக நுகேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடுவெல, நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 21 முதல் 24 வயதுக்குட்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி பொசன் பொஹோயா தினத்தன்று (21) காலை தனது சித்தியுடன் அன்னதானத்திற்கு சென்று, தான் புத்தக கடைக்கு செல்வதாக கூறி காதலனை சந்திக்க சென்றுள்ளதாகவும்


காதலனை சந்தித்து விட்டு, வீடு திரும்பிய மாணவியை, மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தகனசாலையொன்றுக்கு அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


மேலும் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.