கலவான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி பாடசாலையில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
உயிரிழந்தவர் 13 வயதுடைய சிறுமி மற்றும் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)