வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கம்!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இன்று (09) முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கு வாகன இறக்குமதி கட்டுப்பாடு தடையாகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தினால் திரட்டப்படுகின்ற வரி வருமானத்தில் 25 சதவீதமானவை வாகன இறக்குமதியினால் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.