நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்திற்கெதிராக மனுத்தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்திற்கெதிராக மனுத்தாக்கல்!


நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.