சிறுவனை தடியால் தாக்கிய மௌலவி ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவனை தடியால் தாக்கிய மௌலவி ஒருவர் கைது!


காத்தான்குடி 06 பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மௌலவி ஒருவர் தடியால் சிறார் ஒருவரை உடல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 


கடந்த சனிக்கிழமை (28) இரவு மதரசா பள்ளிவாசலில் பாடம் நடத்திக் கொண்டிருந்த 08 வயதுக் குழந்தையை மௌலவி உடல் ரீதியாகத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.


காயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.


மௌலவி காத்தான்குடி 06 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


வகுப்புப் பாடமாக ஒதுக்கப்பட்ட பாடத்தை மனப்பாடம் செய்யத் தவறியதால் மௌலவி குழந்தையை உடல் ரீதியாகத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.