மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை மகள் மீது ஆசிட் வீச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை மகள் மீது ஆசிட் வீச்சு!


முல்லேரியா, அம்பத்தலே பிரதேசத்தில் இன்று (11) காலை ஆண் ஒருவரும் அவரது மகளும் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர்.


தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அசிட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.


சாலையில் நின்றுகொண்டிருந்த ஒருவரால் இந்த ஆசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


படுகாயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.