நாட்டில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!


நாட்டில் மேலும் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும் நாட்டில் தற்போது 11 பல்கலைக்கழகங்களே உள்ளன. இது அவர்களின் கல்வி நடவடிக்ககைகளை முன்னெடுக்க போதாது. எமது நாட்டில், பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேதரத்தில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் அதிலிருந்து சிறந்த வைத்தியர்களை நாம் உலக மருத்துவ துறைக்கு வழங்க முடியும். எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.


சுகாதாரத்துறை அமைச்சர் என்ற வகையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க தமது அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.