இரசாயன களஞ்சியசாலையில் பாரிய தீ; பகுதி மக்கள் வெளியேற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரசாயன களஞ்சியசாலையில் பாரிய தீ; பகுதி மக்கள் வெளியேற்றம்!


ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த தீயினால் பல கிலோமீற்றர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளித்தது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


7 தீயணைப்பு வாகனங்களுடன் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தனர்.


எனினும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.