நேற்றைய விபத்தை தொடர்ந்து மேலும் ஒரு பேருந்து விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய விபத்தை தொடர்ந்து மேலும் ஒரு பேருந்து விபத்து!


அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த பேருந்து யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்நிலையில், நேற்றைய தினம் பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.


இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 35 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.