மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவுரும் அசாதாரண காலநிலை காரணமாக இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (06) மற்றும் மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அந்த வலயத்தில் இன்றும் (05) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.